கஞ்சிக்கோப்பைக்கும் புரியாணிக்கும் முஸ்லிம்கள் ஏமாறமாட்டார்கள்.

தேர்தலை இலக்கு வைத்து கண்டியில் இப்தார்

கஞ்­சிக்­கோப்­பை­யையும் புரி­யா­ணி­யையும் இலஞ்சமாக கொடுத்து மத்­திய மாகா­ணத்தில் அர­சாங்கம் வாக்­கு­களை பெற முயற்­சிக்­கி­றது. 

கடந்த காலங்­களில் கொழும்பு அலரி மாளி­கையில் ஜனா­தி­ப­தி­யினால் நடத்­தப்­பட்ட இப்தார் நிகழ்வு மத்­திய மாகாண சபை தேர்­தலை இலக்­காக கொண்டு இம்­முறை கண்­டிக்கு மாற்­றப்­பட்­டுள்­ளது என மேல்­மா­காண சபை ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் செவ்வாய் கிழமை ராஜ­கி­ரி­யவில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே முஜிபுர் ரஹ்மான் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

உண்­மை­யான சமூக உணர்­வுள்ள முஸ்­லிம்கள் கண்­டியில் ஜனா­தி­ப­தி­யினால் நடத்­தப்­படும் இப்தார் நிகழ்வை புறக்­க­ணிக்க வேண்டும். வெறும் கஞ்சிக் கோப்­பைக்கும் புரி­யா­ணிக்கும் ஏமாந்து முஸ்லிம் சமூ­கத்தை காட்டிக் கொடுத்­து­விடக்கூடாது.

நாட்டில் இன மத முறு­கல்கள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றன. குறிப்­பாக முஸ்­லிம்­க­ளுக்­கொ­தி­ரான கடும்­போக்­கா­ளர்­களின் செயற்­பா­டுகள் கட்­டுக்­க­டங்­காமல் செல்­கின்­றன.

போர்த்­துக்­கேயர் இலங்­கையில் தமது ஆட்­சியை நிறு­வி­ய­போது முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ராக கடு­மை­யான அடக்­கு­மு­றை­களை மேற்­கொண்­டனர். இதன்­போது இலங்கை மன்­னர்கள் முஸ்­லிம்­களை பாது­காத்­தனர்.

அத­னையும் மிஞ்­சி­ய­தாக தற்­போது மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியில் முஸ்­லிம்­களுக் கொதி­ரான நட­வ­டிக்­கைகள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளன.

இரு­பது வருட கால­மாக இயங்கி வந்த மஹி­யங்­கனை பள்­ளி­வா­சலை அர­சாங்­கத்தின் ஊவா மாகாண அமைச்சர் ஒருவர் மூடினார். இதன்­பி­றகு அதனை பள்­ளி­வாசல் என்று தொழு­கையை நடத்த விடாத வகையில் பள்­ளி­வாசல் காணி உரி­மை­யா­ள­ரிடம் கடி­தத்­தையும் பெற்­றுள்­ளனர்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் மூடப்­பட்­டுள்­ளது. அங்கு வாழும் 25 முஸ்லிம் குடும்­பங்­களும் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளன.

கடந்த திங்­கட்­கி­ழமை வாத்­து­வையில் இறைச்­சிக்­க­டை­யொன்று தீக்­கி­ரையாக்­கப்­பட்­டது. அண்­மையில் தெமட்­ட­கொ­டையில் இறைச்சி லொரி­யொன்று தீ வைத்து கொழுத்­தப்­பட்­டது.

இவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் தொடர்ச்­சி­யாக நடத்­தப்­பட்டு வாரு­கின்­றன.

ஆனால் இச்­சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களும் பின்­ன­ணியில் இருப்­ப­வர்­களும் கைது­செய்­யப்­ப­டாமல் இருக்­கின்­றனர்.

இந்த அர­சாங்கம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்­கான எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யையும் எடுக்­க­வில்லை. இந்த சம்­ப­வங்கள் ஏற்­ப­டா­த­வாறு தடுப்­ப­தற்­கான அக்­கறை காட்­ட­வில்லை.

இவ்­வாறு முஸ்­லிம்கள் விட­யத்தில் அக்­கறை கொள்­ளாத அரசு மக்­களை ஏமாற்ற நிணைக்­கி­றது.

இது­வரை காலமும் கொழும்பு அல­ரி­மா­ளி­கையில் நடத்­தப்­பட்ட இப்தார் நிகழ்வு எதிர்­வரும் 3 ஆம் 4 ஆம் திக­தி­களில் கண்டி ஜனா­தி­பதி மாளி­கையில் நடத்­து­வ­தற்கு ஏற்­பாட செய்­யப்­பட்­டுள்­ளது.

இது மத்­திய மாகாண சபை தேர்­தலை இலக்­கா­க­கொண்டே நடத்­தப்­ப­டு­கி­றது.

கஞ்சிக் கோப்­பை­யையும் புரி­யா­ணி­யையும் முஸ்­லிம்­க­ளுக்கு இலஞ்­ச­மாக கொடுத்து வாக்குகளை கொள்ளையடிக்க முயற்சி செய்கின்றனர்.

நாட்டில் இன்று முஸ்லிம்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் உண்மையான சமூக உணர்வு இருக்குமாயின் இந்த இப்தார் நிகழ்வை புறக்கணிக்கவேண்டும். அதைவிடுத்து இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொள்வதென்பது முஸ்லிம்களை காட்டிக்கொடுத்து சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும்.(v.v)

.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :