ஆற்றில் மூழ்கி சாரணர் இயக்க மாணவன் 14 வயது பாயிஸ் உயிர் இழப்பு.

ட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பொத்தானை ஆற்றில் மூழ்கி சாரணர் இயக்க மாணவர் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.

ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தைச் சேர்ந்த பதினைந்து (15) மாணவர்கள் இன்று (24.05.2013) காலையில் சாரணர் பயிற்சியினைப் பெரும் பொருட்டு வித்தியாலய அதிபர் எம்.அஹமட் சாபிர் தலைமையில் வாகனேரி பொத்தானைப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

பொத்தானைக்குச் சென்ற மாணவர் குழுவினர் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய வேளையில் ஆற்றில் மூழ்கி உயிர் இழந்துள்ளார் .
பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் தரம் 09ல் கல்வி கற்கும் பதுர்தீன் பாயிஸ் (வயது 14) என்ற மாணவனே உயிர் இழந்தவராவார்.

ஓட்டமாவடி ஹூதா பள்ளி வாயல் வீதியைச் சேர்ந்த பதுர்தீன் தம்பதிகளின்; ஐந்து பிள்ளைகளுள் இவர் இரண்டாவது பிள்ளையாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :