சம்மாந்துறையில் இன்று காலை நடந்த வாகன விபத்து (படங்கள் இணைப்பு)

(எஸ்.அக்தர், எம்.ரீ.எம்.பர்ஹான்)

நேற்று (21.05.2013) காலை 6.30 மணியளவில் சம்மாந்துறை நெல்லுப்பிட்டிச் சந்தியில் நடைபெற்ற வாகன விபத்தில் காயப்பட்ட இருவர் ஆபத்தான நிலையில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மின்சாரக் கொங்றீட் கம்பங்களை ஏற்றிக் கொண்டு கல்முனையை நோக்கி சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய வீதியினூடாக அம்பாரையில் இருந்து வருகை தந்து கொண்டிருந்த கனரகப் பொருட்களை ஏற்றும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சம்மாந்துறை நெல்லுப்பிட்டிச் சந்தியில் உள்ள ஆற்றுக்குள் இறங்கியுள்ளது.

 இதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வானத்தின் சாரதியான சந்தன (33) என்பரும், உதவியாளரான எஸ்.ஏ.குலரத்ன(45) ஆகிய இருவருமே காயங்களுக்குள்ளானார்கள். இவர்கள் அம்பாரையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்துக்குள்ளான வாகனத்திற்குள் சிக்கிய இருவரையும் மீட்டு வெளியே எடுப்பதற்கு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் ஏற்பட்டன. சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.








 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :