கதீஜா நம்பிக்கை நிதியத்தினால் மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வைபவம்.

(எம்.பைஷல் இஸ்மாயில்)
தீஜா நம்பிக்கை நிதியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடந்த வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று (25) அட்டாளைச்சேனை கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட இணைப்பார் ஏ.பி.கமால்டீன் தலைமை தாங்கினார். கடந்த வருடம் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற சுமார் 600 மாணவர்கள் கலந்து கொண்டு அதிதிகளினால் சான்றிதழ், பதக்கம் மற்றும் பாடசாலை உபகரம் கொண்ட பாடசாலைப் பையையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக முன்னாள் முஸ்லிம் சேவைகள் பணிப்பாளர் எம்.இஸட்.அகமட் முனவ்வர், அமைப்பின் தலைவர் தேசமான்ய எம்.எஸ்.எச்.முஹம்மட், ஓய்வு பெற்ற ஆசிரியர் மௌலவி ஏ.பி.றபியுடீன் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இவ்விழாவுக்கு பல நூற்றுக்கணக்கான பெற்றோர்களும் பங்கு பற்றியிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :