போனில் மனைவி அழுததால் பறக்க இருந்த விமானத்தில் இருந்து அவசரமாக இறங்கிய நபர்.














பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் விமானத்தில் ஏறிய பின், பாஸ்போர்ட்டை காணவில்லை என்று கூறி கீழே இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ராத் மாவட்டத்தை சேர்ந்தவர் பைசல் அலி. இவர் இத்தாலி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய நேற்று லாகூர் ஏர்போர்ட் வந்தார். போர்டிங் பாஸ் வாங்கி கொண்டு விமானத்தில் ஏறினார். விமானம் கிளம்ப இருந்த நேரத்தில் திடீரென தனது பாஸ்போர்ட்டை காணவில்லை என்று கூறியதால் கீழே இறக்கப்பட்டார்

அவரிடம் குடியுரிமை துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, போனில் மனைவி பேசியதாகவும், தான் வெளிநாடு செல்வதால் மிகவும் மனவருத்தத்தில் இருப்பதாகவும் அதனால் விமானத்தில் இருந்து வெளியேற பாஸ்போர்ட்டை கிழித்து போட்டு விட்டு காணவில்லை என்று நாடகமாடியதாகவும் கூறினார். போனில் மனைவி அழுவதை என்னால் தாங்க முடியவில்லை என்று கூறினார். அதை கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் கிழித்து வைத்திருந்த பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து கொண்டு பைசல் அலியை விடுவித்தனர். இதனால் ஏர்போர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :