லண்டனில் கிரேன் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்து!

லண்டனில் வாக்ஸ்ஹால் ரயில் நிலையம் அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள ஒரு கிரேன் மீது இன்று தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மோதி வெடித்தது.

அதில் எளிதில் தீப்பற்றக்கூடிய எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததால், மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. கிரேன் அருகில் நின்றிருந்த இரண்டு கார்களும் பற்றி எரிந்தன.

பொலிசார் மற்றும் 22 வாகனங்களில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்து நடந்த இடத்தின் மிக அருகில்தான் இங்கிலாந்து இரகசிய புலனாய்வு அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ளது. புதிய அமெரிக்க தூதரகத்தின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பஸ் நிலையமும் அருகில் உள்ளது.

விபத்து நடந்ததும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தங்கள் வாகனங்களுடன் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

வாக்ஸ்ஹால் மற்றும் வாட்டர்லூ ரயில் நிலையங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :