அட்டாளைச்சேனை புறத்தோட்டம் 9ம் பிரிவில் மாட்டுக் காளைகள் கட்டப்பட்டிருப்பதால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
தற்போது மாரி காலம் என்பதால் மாட்டுச் சானத்தின் நாற்றம் மிக மோசமாக உள்ளது. மக்கள் வீடுகளில் இருக்க முடியாத அளவிற்கு தூர் நாற்றம் வீசுகின்றது. இரவு வேளைகளில் மாடுகள் குடியிருப்பு வேளிகளை உடைத்து சேதப்படுத்துவதுடன் பயிர்களையும் நாசப்படுத்துகின்றது.
இது விடயத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment