வானில் இருந்து மர்மப்பொருள் விழுந்து மரம்தீப்பற்றி எரிந்துள்ளது..!

வலஸ்முல்ல தெற்கு கனுமுல்தெனியவில் 'மர்மப்பொருள்' விழுந்துள்ளதாக தேசிய வானியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.

கனுமுல்தெனிய கஹடேல்லகெட எனுமிடத்தில் பலாமரத்தின் மீதே இந்த 'மர்மப்பொருள்' விழுந்துள்ளதாகவும் அந்த மர்மப்பொருள் விழுந்ததையடுத்து குறித்த மரம் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வானத்திலிருந்து பாரிய வெளிச்சத்துடன் பூமியை நோக்கி நேற்றிரவு 9 மணியளவில் மிகவேகமாக வந்த அந்த மர்மப்பொருள் பலாமரத்தில் சுமார் 25 அடி உயரத்தில் விழுந்து சாம்பலாகியுள்ளது. அந்த மரமும் 25 அடி உயரத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

இதனையடுத்து பிரதேசவாசிகள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். திம்புலாகல மற்றும் கம்பஹா பிரதேசங்களிலும் இவ்வாறான மர்மப்பொருட்கள் வியாழக்கிழமை விழுந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :