ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர் மாநாடு







ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 24ஆவது பேராளர் மாநாடு 29ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.00மணிக்கு தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பேராளர் மாநாடு இரண்டு அமர்வுகளாக நடைபெறும். முதலாவது அமர்வில் புதிய உத்தியோகத்தர்கள் அறிமுகம் செய்துவிக்கப்படுவதோடு, செயலாளர் நாயகத்தினதும், பொருளாளரினதும் அறிக்கைகள் வாசிக்கப்படும்.கட்சியின் தவிசாளரின் உரையும் இடம் பெறும். யாப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதோடு, செயற் குழுவிற்கான தெரிவும் இடம் பெறும்.
இரண்டாவது அமர்வில் புதிய உச்ச பீட உறுப்பினர்கள் பற்றி அறிவிக்கப்படும். தேசிய தலைவர் பிரதான உரையாற்றுவார்.
நாடெங்கிலும் இருந்து கட்சியின் ஏராளமான  பேராளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
முன்னதாக 28 வெள்ளிக்கிழமை கட்சியின் கட்டாய உச்ச பீட கூட்டம் தாருஸ் சலாம் தலைமையகத்தில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடக்தக்கது.


Dr A.R.A. Hafeez
Media consultant


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :