கனடாவில் புதிய தொழிலாழர்களுக்கான கதவு திறப்பு

Share on


(சஹீர் பளீல்)
குடிவரவுத் துறை அமைச்சாராகிய ஜெசென் கெனடி அவர்கள் கொண்டுவரவுள்ள புதிய திட்டமானது பல திறைமையான தொழில் நிபுணர்களை கனடாவுக்குள் வருவதற்கு சந்தர்ப்பம் அளிக்கவுள்ளது. அத்துடன் வருகையைத் துரிதப்படுத்தும் எனவும் நம்பப்படுகின்றது இத்திட்டமானது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் புள்ளிமுறைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட தகைமைகளைப் போன்றதல்லாது வேறுபட்டதாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் முக்கிய தகைமைகள் சில: ● ஆங்கிலத்தில் அல்லது பிரென்சு மொழியில் அடிப்படைத் தகுதி இருத்தல் வேண்டும் ஆனால் புள்ளித் திட்டத்தைப் போல் தரம் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை.

● தற்சமயம் துறைசார் தொழிலில் பணியாற்றுவது பற்றி நிருபித்தல்.

இந்த மாற்றமானது ஒரு சரியான பாதையை உருவாக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் கனடாவுக்குச் சில  தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். குறிப்பாக அல்பேட்டா மாகாணத்திற்கு தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். அங்கு வருகின்ற பத்து வருடங்களில் 115.000 அளவில் மேலதிக தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :