இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு பெயர்போன இடமாகவுள்ள பாசிக்குடா கடற்கரையோரம் அமைந்துள்ள பெரிய கிணறு ஒன்றினால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்கின்றனர்.
பல வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இக் கிணறு உயரம் குறைவான நிலையில் காணப்படுகிறது.
இதனால், அங்கு வரும் சிறுவர்கள் கிணற்றின் அருகில் செல்வதும், அதனை எட்டிப் பார்ப்பதுமாக உள்ளனர்.
இதனால், சிறுவர்கள் தவறி விழுந்து விடுவார்களோ என்று அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்கின்றனர்.
இவ்வாறு பாதுகாப்பு இல்லாத வகையிலுள்ள இந்த கிணற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து புனர்நிர்மாணம் செய்யுமாறு சுற்றுலாப் பயணிகள் வேண்டிக் கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment