பாசிக்குடாவில் அச்சமூட்டும் கிணறு!



எச்.எம்.எம்.பர்ஸான்-
லங்கையில் சுற்றுலாத்துறைக்கு பெயர்போன இடமாகவுள்ள பாசிக்குடா கடற்கரையோரம் அமைந்துள்ள பெரிய கிணறு ஒன்றினால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்கின்றனர்.

பல வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள இக் கிணறு உயரம் குறைவான நிலையில் காணப்படுகிறது.

இதனால், அங்கு வரும் சிறுவர்கள் கிணற்றின் அருகில் செல்வதும், அதனை எட்டிப் பார்ப்பதுமாக உள்ளனர்.

இதனால், சிறுவர்கள் தவறி விழுந்து விடுவார்களோ என்று அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்கின்றனர்.

இவ்வாறு பாதுகாப்பு இல்லாத வகையிலுள்ள இந்த கிணற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து புனர்நிர்மாணம் செய்யுமாறு சுற்றுலாப் பயணிகள் வேண்டிக் கொள்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :