அமெரிக்க டொலரின் மதிப்பு 300 ரூபாவாக உயரக்கூடிய ஆபத்து - முன்னாள் பிரதமர் ரணில்



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
நாட்டின் கடுமையான டொலர் பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்றால் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்தும் கடன் பெற முடியும் என முன்னாள் பிரதமரும் UNPயின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதிக்காது என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் கிட்டத்தட்ட $6 Billion திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறினார்.

ஜக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே UNPயின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

அந்நியச் செலாவணி பாரிய நெருக்கடியாக மாறியுள்ள வேளையில் சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லும் போது ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களும் இலங்கைக்கு கடன் வழங்க முன்வருமென்றும் , ஏனைய நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும் போது சர்வதேச நாணய நிதியத்துடன் கையாள்வது உத்தரவாதமாக கருதப்படலாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

எவ்வாறாயினும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறத் தவறினால் அமெரிக்க டொலரின் மதிப்பு 300 ரூபாவாக உயரும் ஆபத்து இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :