எ.எச்.ஹஸ்பர்-
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், நேற்று (22) கொழும்பில் நடைபெற்ற இந்திய CEO மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்திய CEO மன்றம் (ICF) 2026 மே 22 அன்று தனது வருடாந்த பொதுக்கூட்டத்தை (AGM) நிறைவு செய்து, இந்தியா–இலங்கை பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், முதலீட்டு வசதிகள் மற்றும் நிறுவன ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது.
இந்திய CEO மன்றத்தில் இலங்கையில் செயல்படும் இந்திய நிறுவனங்கள், இந்திய வம்சாவளியினரை தலைமையாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய வணிகத் தலைவர்களால் வழிநடத்தப்படும் இலங்கை நிறுவனங்கள் இணைந்துள்ளன. தற்போது, இந்த மன்றம் 70-க்கும் மேற்பட்ட உறுப்பினர் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கம், முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம், திறன் மேம்பாடு, வெளிநாட்டு நாணய வருவாய் மற்றும் இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.
“ டிட்வா” பேரழிவின் போது, ICF உறுப்பினர் நிறுவனங்கள் இலங்கை மக்களுக்கு உதவவும், நாட்டை மீளமைக்கும் அரசாங்க முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் 2 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நிதியுதவியை வழங்கின.
வருடாந்த மாநாட்டின் போது, உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இந்திய CEO மன்றம் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, நிறுவன ஈடுபாடு மற்றும் இருதரப்பு பொருளாதார கூட்டுறவை மேம்படுத்த தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டினார்.
ICF தலைவர் கிஷோர் ரெட்டியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான வலுவான மற்றும் வளர்ந்து வரும் உறவை எடுத்துரைத்தார்.
குறிப்பாக டிஜிட்டல், எரிசக்தி, கடல்சார் மற்றும் நில இணைப்புகள் போன்ற துறைகளில் இணைப்புகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்தியா–இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும், புதுப்பிக்கப்பட்ட FTA இலங்கையின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் முதலீட்டிற்கு பெரும் வாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதையும் விளக்கினார்.
FTA மூலம் செயல்படும் வர்த்தகங்களில் இலங்கைக்கு இந்தியாவுடன் சாதகமான வர்த்தக சமநிலை இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்திய நிறுவனங்கள் “அண்டை நாடுகள் முதன்மை” (Neighborhood First) கொள்கையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் ஊக்குவித்தார்.
இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இலங்கை தொழில்துறை தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், இலங்கை தொழில்துறை தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்

0 comments :
Post a Comment