“தூய்மையான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” சிரமதானப் பணி முன்னெடுப்பு !


நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை மற்றும் பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் “தூய்மையான கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளில் விசேட கடற்கரை சிரமதானப் பணி இன்று (23) காலை நடைபெற்றது.

காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில், காரைதீவு பிரிவு பொதுமக்கள், இளைஞர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு கடற்கரைப் பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் கடற்கரை, காரைதீவு சுனாமி நினைவுத்தூபி கடற்கரை மற்றும் காரைதீவு அனர்த்த முகாமைத்துவ நிலைய கடற்கரை ஆகிய பகுதிகளில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வின் மூலம் கடற்கரைப் பகுதிகளை சுத்தமாகவும் கவர்ச்சிகரமாகவும் பேணுவதின் அவசியம் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன், உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், பிரதேச செயலக அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

“சுத்தமான சூழல் – பாதுகாப்பான எதிர்காலம்” என்ற செய்தியையும் இந்நிகழ்வு வலியுறுத்தியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :