மழைக்கால நீர் தேக்கத்தை தடுக்க வடிகால் சுத்திகரிப்பு நடவடிக்கை!



நூருல் ஹுதா உமர்-

மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட நீர் தேக்க நிலையை தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையினால் விசேட வடிகால் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் வழிகாட்டலில், அல்-முனீர் பாடசாலையைச் சுற்றியுள்ள வடிகான்கள் மற்றும் ஜமாலியா பள்ளிவாசல் பிரதேச வடிகால்களில் தேங்கியிருந்த குப்பைகள் மற்றும் மணல்கள் பிரதேச சபை ஊழியர்களால் அகற்றப்பட்டன.

மேலும், அல்-முனீர பாடசாலை வடிகாலில் நீண்டகாலமாக காணப்பட்ட பாரிய கல்லொன்றும் பிரதேச சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் அகற்றப்பட்டு, வடிகால் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டது.



இந்நடவடிக்கையால் மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் நீர் தேக்கம் ஏற்படும் அபாயமும் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :