தென்கிழக்கு பல்கலைக்கழக களஞ்சியசாலையில் தீ! விரைந்து கட்டுப்பாட்டில் கொண்டுவந்த தீயணைப்புக் குழுவினர்!!



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின், அம்பாறை கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள மாணவர் விடுதியின் பின்புற களஞ்சியசாலையில் இன்று (29) காலை தீ விபத்து ஏற்பட்டது.

இன்று காலை சுமார் 7.20 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததன் பயனாக தீ விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீயை அணைப்பதற்காக அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் கல்முனை தீயணைப்புப் படையினர் மட்டுமல்லாமல் சம்மாந்துறை பிரதேச சபையின் தீயணைப்புக் குழுவினரும் இணைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்து குறித்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் கூறுகையில்,

“தீ இன்று (2025.10.29) காலையில் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகமும் சம்மாந்துறைப் பொலிசாரும் ஆராய்ந்து வருகின்றனர். தீயைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர விரைந்து உதவிய அம்பாறை, அக்கரைப்பற்று,கல்முனை தீயணைப்புப் படையினர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் தீயணைப்புக் குழுவினருக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார்.

மாணவர் விடுதியின் பின்புறமாக அமைந்துள்ள பாவனைக்கு உதவாத பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. தீ விபத்தில் ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஆராய்ந்து வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :