நபி முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தமது பிறந்த தினமான 12 ரபீஉல் அவ்வல் திகதியை தனிப்பட்ட முறையில் நினைவு கூர்ந்ததாக வரலாற்றில் இல்லை. ஆனால், அவர்கள் தங்களது பிறந்த நாளான திங்கட்கிழமை அன்று நோன்பு நோற்று அதனை மதித்ததாக ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.
ஒரு ஹதீஸில், "திங்கட்கிழமை என் பிறந்த நாள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதையும் பார்க்கலாம். எனவே, நபியை நேசிக்கும் ஒவ்வொருவரும் திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்றுப் பிறந்த நாளை நினைவு கூறுவது நபி வழியாக (ஸுன்னா) கருதப்படுகிறது.
ஆனால், 12 ரபீஉல் அவ்வல் தினத்தை ஒருவகை மகிழ்ச்சித் திருநாளாக கொண்டாடுவது பிற்கால முஸ்லிம் சமூகங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒரு கலாசார நிகழ்வாகும்.
இத்தகைய கலாசார நிகழ்வுகள் பல முஸ்லிம் நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதாலும், இலங்கை முஸ்லிம்களும் பெரும்பாலும் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே, மீலாத் தினம் என்ற பெயரில் இந்த நாளை ஏழைகள் மற்றும் தேவையுடையோருக்கு உதவி செய்வதன் மூலம் நினைவுகூர்வதற்கான ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.
முஸ்னத் முபாரக்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்

0 comments :
Post a Comment