கரையோர பூங்காக்கள் அமைக்கும் திட்டம்; ஆதம்பாவா எம்.பி.யினால் சாய்ந்தமருதில் அங்குரார்ப்பணம்



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
அரசாங்கத்தின் 100 பசுமையான கரையோரப் பூங்காக்கள் அமைக்கும் தேசிய திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் சாய்ந்தமருது சதுக்கம் அண்மித்த பிரதேசத்திலும், கல்முனை – 2B பிரதேசத்திலும் புதிய பூங்காக்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (01) திங்கட்கிழமை அங்குரார்ப்பணமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக், உதவி பிரதேச செயலாளர் எம். ஐ. முஆபிகா, கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பொறியியலாளர் எம். துலஷிதாஸன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பசுமைச் சூழலை மேம்படுத்தி, கடலோர மக்களுக்கு சுவாசிக்கும் இடங்களையும், ஓய்வு பெறும் சுற்றுலா தளங்களையும் வழங்கும் நோக்கில் அரசு முன்னெடுத்து வரும் இத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் சிறப்பு முன்மொழிவுக்கு அமைவாக கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியின் போது உரையாற்றிய எம்.பி. ஆதம்பாவா, “கரையோரங்களை பாதுகாத்து, பசுமையை வளர்ப்பது எதிர்கால தலைமுறைக்கு வழங்கப்படும் விலைமதிப்பற்ற சொத்து ஆகும். சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் மட்டுமல்லாது, கிழக்கு மாகாணம் முழுவதும் பசுமையான பூங்காக்கள் உருவாக்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் இன்னும் 8 பூங்காக்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் வரவிருக்கும் நாட்களில் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :