அதனைத் தொடர்ந்து புத்தளம் நகர்ப்புறம் மற்றும் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும் அமைச்சர் விஜயம் செய்து மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். கடல்காற்றின் வலுத்தலை காரணமாக சில இடங்களில் படகுகள் சேதமடைந்தது, வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பயன்பாடற்ற நிலையில் போனது போன்ற பிரச்சினைகள் குறித்து மக்கள் அமைச்சரிடம் விளக்கமளித்தனர். அண்மைய நாட்களில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு மற்றும் மழை தாக்கம் மீனவர் குடும்பங்களின் தினசரி வாழ்வை கடுமையாக பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சருடன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்ஸாட் அஹமத் உள்ளிட்ட பல அரசியல் பிரதிநிதிகளும், கடற்றொழில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களுக்கும் நிர்வாக உதவிகளில் ஏற்பட்ட தாமதங்களுக்கும் தீர்வு காணும் வகையில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
விஜயத்தின் போது அமைச்சர், உடனடி நிவாரண நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களின் சீரமைப்புக்கான உதவிகள் விரைவில் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். எதிர்காலத்தில் இவ்வாறான இயற்கை மாற்றங்களுக்கு முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளும் நோக்கத்தையும் தெரிவித்தார். மேலும், மீனவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக கடல்நிலை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல் முறைமைகளை விரிவுபடுத்தும் திட்டங்களும் பரிசீலனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விஜயம் மூலம் புத்தளம் மற்றும் கற்பிட்டி கடற்கரைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் கவனித்து மீனவர் சமூகத்தின் அவசர தேவைகளை அரசாங்கம் முனைப்புடன் தீர்த்து வைக்கும் முயற்சியை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.
க.கிஷாந்தன்
ஊடக செயலாளர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு
.jpeg)
0 comments :
Post a Comment