நாட்டை தாக்கிய டித்வா புயல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாடளாவிய ரீதியில் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி, தனது மனிதாபிமான சேவையின் ஒரு பகுதியாக மன்னார் மாவட்டத்திலும் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் பணியை மேற்கொண்டது.
இந்நிவாரணப் பணியின் மன்னார் மாவட்ட கட்டத்தை, கட்சியின் ஏற்பாட்டில், கட்சியின் உபதலைவரும் மார்க்க அறிஞருமான அஷ்ஷேய்க் சதீக் (முப்தி) அவர்கள் முன்னிலையாகித் தொடங்கி வைத்தார். டித்வா புயலின் தாக்கத்தால் கடும் சேதத்துக்கு உள்ளாகிய பல கிராமங்களின் மக்களிடையே சென்று, அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் நேரடியாக கையளிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட இப்பொதிகளில், குடும்பங்களுக்கு அவசியமான அடிப்படை உலர் உணவுப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்று, நிவாரணப் பணிகள் சீராகச் செயல்பட ஒத்துழைப்பு வழங்கினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment