தாய்மார் ஆதரவு கழகத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான தையல் பயிற்சி பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது!



அபு அலா-
ம்பாறை - சின்னப் பாலமுனை தாய்மார் ஆதரவு கழகத்தின் ஏற்பாட்டில் பெண்களுக்கான தையல் பயிற்சி பாடநெறி ஒன்றை (18) சின்னப் பாலமுனை சுகாதார நிலையத்தில் ஆரம்பித்து வைத்தது.

தாய்மார் ஆதரவு கழகத்தின் தலைவி திருமதி என்.சுமைறா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் கலந்துகொண்டு குறித்த தையல் பயிற்சி பாடநெறி கட்டடத்தை திறந்து வைத்ததுடன் பயிற்சி பாடநெறியை ஆரம்பித்து வைத்தார்.

3 மூன்று மாதகாலத்தை அடிப்படையாகக் கொண்ட இப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்து வெளியேருகின்றவர்கள் தங்களின் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றத்தை அடையமுடியும் எனவும் இந்த முன்மாதிரிமிக்க வேலைத் திட்டத்தை ஆரம்பித்து வைக்க பாடுபட்டவர்களை பாராட்டுகிறேன் என்று அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
மேலும் இந்தப் பயிற்சி நெறியில் இணைந்து கொள்ள விரும்பும் பெண்கள் குறித்த நிர்வாகத்தை தொடர்புகொண்டு இணைந்து கொள்ளமுடியும் என்ற ஆலோசனையையும் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :