மீண்டும் ஆணை வழங்கிய மூவின மக்களுக்கும் நன்றிகள் - வாகரை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர்.



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
டைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மீண்டும் மக்களாணை வழங்கிய தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக புனானை கிழக்கு 10ம் வட்டாரத்திலிருந்து வாகரை பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் சமூகச்செயற்பாட்டாளருமான எஸ்.எம்.தாஹிர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து என்னால் முடிந்த சேவைகளை இவ்வட்டாரத்திலுள்ள மூவின மக்களுக்கும் வழங்கியுள்ளேன். அதனை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் அதிகப்படியான வாக்குகளை எனக்களித்து என்னையும் என்னோடு போட்டியிட்ட சக வேட்பாளர் முஹம்மது முனாஸ் அவர்களையும் வெற்றி பெற வைத்ததனூடாக மீண்டும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக உணர்கிறேன்.

எதிர்காலத்திலும் மக்கள் வழங்கிய ஆணைக்குட்பட்டு என்னால் முடிந்த சேவைகளை மூவின மக்களுக்கும் முன்னெடுக்கவுள்ளேன்.

நிச்சயமாக மக்கள் வழங்கிய ஆணையும் ஆதரவும் வீண் போகாது என்பதை இறைவன் துணையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இச்சந்தர்ப்பத்தில் வெற்றியை வழங்கிய வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக, தோளோடு தோள் நின்று என் வெற்றிக்காகவும் சக வேட்பாளரின் வெற்றிக்காகவும் உழைத்த ஆதரவாளர்கள், வாக்காளர்கள், அரச உத்தியோகத்தர்கள், உலமாக்கள், நண்பர்கள், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், குடும்ப உறவுகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்தோடு, என் மீது முழு நம்பிக்கை வைத்து இச்சந்தர்ப்பதை வழங்கிய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தொடர்ந்து இப்பிரதேச மக்களின் மீது அக்கரையோடும் அபிவிருத்தியிலும் முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வரும் எனக்காக இச்சந்தர்ப்பதை வழங்கி வெற்றிக்கு வித்திட்ட முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :