மருதமுனை அல்- ஹிக்மா ஜூனியர் பாடசாலையின் புதிய அதிபராக ஏ. எம். சிறின்தாஜ் பைலான் கடமையை பொறுப்பேற்றார்.



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ருதமுனை அல்- ஹிக்மா ஜூனியர் பாடசாலையின் புதிய அதிபராக மருதமுனையை சேர்ந்த ஏ.எம். சிறின்தாஜ் பைலான் இன்று (8) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாடசாலையின் பொறுப்பதிபர் கடமையிலிருந்த முன்னாள் அதிபர் எம்.எல்.எம்.மஹ்ரூப் அவர்கள் கடந்த 30ஆம் திகதி ஓய்வு பெற்று சென்றதை அடுத்து பாடசாலையில் புதிய அதிபரை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்று நேர்முகப் பரீட்சையின் பிரகாரம் இவர் இப்பாடசாலைக்கு புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலையின் பதில் அதிபராக கடமையாற்றிய ஏ.கே.பாரிஸ் தலைமையில் நடைபெற்ற புதிய அதிபர் கடமையேற்பு நிகழ்வு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம், பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், பாடசாலை உதவி அதிபர், அபிவிருத்தி நிறைவேற்று குழுவினர், முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தற்போதைய அதிபரின் குடும்பத்தினர், நலன் விரும்பிகள், பாடசாலை சமூகத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.

1978 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் திகதி பிறந்த ஏ.எம்.சிறின்தாஜ், தனது முதல் ஆசிரியர் சேவை நியமனத்தை 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் பெற்று பின்னர் மருதமுனை அல்-ஹம்றா வித்யாலயத்தில் ஆசிரியர் சேவையில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, இலங்கை அதிபர் சேவை போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 2016 ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி முதல் அல்-ஹம்றா வித்யாலயத்தில் அதிபர் சேவையில் உள்ளீர்ப்பு செய்யப்பட்டு பின்னர் பிரதி அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அல்- ஹிக்மா ஜூனியர் பாடசாலைக்கு பொறுப்பு அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், மருதமுனையை சேர்ந்த அஹமது முஸ்தபா - சித்தி சபிய்யா தம்பதியினரின் மூத்த மகள் என்பதுடன் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :