2856, மர்கம் வீதி, ஸ்காப்ரோ முகவரியில் அமைந்துள்ள அமானா கொன்பிரன்ஸ் ஹாலில் மே மாதம் 13ம் திகதி மாலை 06 மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழ், முஸ்லிம் வாசகர் வட்டம் - டொரண்டோ இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
818 பக்கங்களைக் கொண்ட இந்த நூல், ஐந்து வருட ஆய்வின் மூலம் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு ஹஸன் முபாரக் தலைமை தாங்குவதுடன், அய்யூப் அஸ்மின் நூல் அறிமுகம் செய்வதுடன், றஸ்மா ரஸ்மி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.
விசேட விருந்தினராக பேராசிரியரும் கவிஞருமான சேரன் மற்றும் வெளியீட்டாளர் எம்.பௌசர் ஆகியோர் இந் நூல் தொடர்பில் உரை நிகழ்த்தவுள்ளனர்.
நூலாசிரியர் சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் இதற்கு முன்னர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் 'எம்.எச்.எம். அஸ்ரபின் மரணம்' மற்றும் 30 வருட யுத்தப் பாதிப்பு தொடர்பில் 'சாட்சியமாகும் உயிர்கள்' ஆகிய இரண்டு ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த மூன்று நூல்களும் இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் வெளியீட்டு வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment