அம்பாறை மாவட்ட உதை பந்தாட்ட நடுவர் சங்கத்தின் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான ஒன்று கூடல் நேற்று மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தின் கட்டடத் தொகுதியில் அமைந்திருக்கும் பிரதான மண்டபத்தில் (11) இடம்பெற்றது
அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியருமான எம்.பி. எம்.றஸீட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்டத்தில் உதைபந்தாட்ட துறையில், நடுவர் சங்கத்தின் வகிபங்கு மற்றும் நீண்ட காலமாக மைதானத்தில் விளையாடிய அனுபவத்தோடு நடுவர் சங்கத்தில் இணைந்து செயற்படும் உறுப்பினர்கள் தொடர்பிலும், எதிர்காலத்தில் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகளை நடத்தும் போது போட்டிகளுக்கு நடுவனம் வகிக்கும் நடுவர்கள் குறித்தும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து மாவட்ட உதை பந்தாட்ட நடுவர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. உதைபந்தாட்ட நடுவர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகராக அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் எம்.ஐ. அப்துல் மனாப் தெரிவு செய்யப்பட்டதோடு தவிசாளராக சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் எம்.ஏ.பார்ஸான் தெரிவு செய்யப்பட்டார். சங்கத்தின் தலைவராக தொடர்ந்தும் எம்.பி.எம்.றஸீட் தெரிவு செய்யப்பட்டார். சங்கத்தின் பொதுச் செயலாளராக சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் எம்.எம்.எம்.றியாஸ் தெரிவுசெய்யப்பட்டார். பிரதித் தலைவராக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஆசிரிய ஆலோசகர் யூ.எஸ்.சபீல் தெரிவானார். உப தலைவராக சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் எஸ். எம். அஸீம் தெரிவானார்.
இணைப்பாளராக சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் சி.எம் .அஸ்கர் ஆசிரியர் தெரி வானதுடன் உபசெயலாளராக இலங்கை போக்குவரத்து அதிகார சபையின் உத்தியோகத்தர் எஸ்.எம் குசையின் தெரிவானார்.
இதேவேளை அம்பாறை மாவட்ட உதை பந்தாட்ட நடுவர் சங்கத்தின் பொருளாளராக எம்.என்.எம். சபா தெரிவு செய்யப்பட்டார். சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் நிர்வாக சபை உறுப்பினர்களாக செயற்படுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது நடுவர் சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் பிரதி தலைவர் ஆகியோர் தமது கருத்துக்களை தெரிவித்தனர். இராப்போசனத்தோடு நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment