ஜாமியா நளீமியா கலாபீடத்தில் 23 வருடங்கள் கல்வித்துறை தலைவராகவும் பிரதிப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மௌலானா ஷஹீதுல்லாஹ் கவ்தர் அவர்களை நாட்டுக்கு அழைத்து ஜாமியா நளீமியா பழைய மாணவர்கள் கௌரவித்தனர்
இதன் போது கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி பிரதேசத்திற்கும் அவர் விஜயம் செய்தார்
காத்தான்குடியில் ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் மற்றும் பிஸ்மி இடைநிலைப் பாடசாலை உட்பட பல்வேறு இடங்களுக்கும் சென்ற அவர் மாணவர்களையும் விரிவுரையாளர்களையும் சந்தித்தார்.
இதன் போது காத்தான்குடியைச் சேர்ந்த ஜாமியா நளீமியா பழைய மாணவர்கள் அவருக்கு இங்கும் ஒரு கௌரவித்தினை வழங்கினர்
இதேபோன்று ஜாமியா நளீமியா பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து பழைய மாணவர் அமைப்பினால் கொழும்பில் அவருக்கு மகத்தான கௌரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment