சர்வதேச சுற்றாடல் வாரம் - 2024



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ர்வதேச சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் பிரதேச செயலகம் தோரும் மரநடுகை வேலைத் திட்டம் இன்று (05/06/2024) நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிதியிலிருந்து கொள்வணவு செய்யப்பட்ட பயன் தரும் பழ மரக்கன்றுகளை நடும் நிகழ்வு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் பிரதம அதிதியாககலந்து கொண்டு மரநடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் ஏனைய அதிதிகளாக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றியாஸ், கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹம்மட், மொழி பெயர்ப்பாளர் மௌலவி ஏ.பி.எம்.முஸ்தபா, கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முகம்மத், உட்பட பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்,அதன் நிருவாக உறுப்பினர்கள் ஆகியோரினால் பிரதேச செயலக வளாகத்தில் மரங்கள் நட்டு வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :