சர்வதேச சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் பிரதேச செயலகம் தோரும் மரநடுகை வேலைத் திட்டம் இன்று (05/06/2024) நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிதியிலிருந்து கொள்வணவு செய்யப்பட்ட பயன் தரும் பழ மரக்கன்றுகளை நடும் நிகழ்வு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் பிரதம அதிதியாககலந்து கொண்டு மரநடுகை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வில் ஏனைய அதிதிகளாக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம். றியாஸ், கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத் அஹம்மட், மொழி பெயர்ப்பாளர் மௌலவி ஏ.பி.எம்.முஸ்தபா, கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முகம்மத், உட்பட பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்,அதன் நிருவாக உறுப்பினர்கள் ஆகியோரினால் பிரதேச செயலக வளாகத்தில் மரங்கள் நட்டு வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment