தொடராக பெய்த கடும் மழை காரணமாக களனி கங்கை பெருக்கெடுத்து மல்வானை ரக்ஸபான பகுதி நீரில் மூழ்கியுள்ளமையினால் பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் உரிய இடத்துக்கு விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டதுடன் ரக்ஸபான பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்ற கலந்துரையாடலிலும் கலந்து கொண்டார்.
தொடராக இப்பகுதி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படுவதனால் இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக தேவைப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அவர்களுக்கான இழப்பீடுகள் சம்பந்தமாகவும் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தனது உயர்தர கல்வியினை மல்வான அல் முபாறக் தேசிய கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment