பாடசாலையின் தேவை கருதி பாடசாலையின் சமுகத்தின் வேண்டுகோளினை ஏற்று மாணவர்களுக்கான குடிநீர் விஸ்தரிப்பு மற்றும் குழாய்க்கிணறு தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் பாடசாலையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு றஹ்மத் பெளண்டேசன் அமைப்பின் தலைவரும் ,முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான றஹுமத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான மலேஷிய உயர்ஸ்தானியர் மேதகு பட்லி ஹிஸாம் ஆதம் தமது பாரியார் சகிதம் கலந்து கொண்டு மேற்படி திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
மேலும் இந்திகழ்வில் றஹ்மத் மன்சூர் அமைப்பின் தலைவர் றகுமத் மன்சூர் அவர்களும் அமைப்பின் உறுப்பினர்களும், YWMA அமைப்பின் தலைவி .திருமதி பவாசா தாஹா அவர்களும் மற்றும் அமைப்பின் செயலாளர்,பொருளாளர் ,முன்னாள் தலைவர் ,அமைப்பின் ஏனைய அங்கத்தவர்கள் ,பிரதி அதிபர்,பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ,மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment