பொலிஸாருக்கும் பொதுமக்களுகுமிடையில் நல்லுறவை பேணும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வெசாக் அன்னதானம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்வு பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.லசந்த பண்டார மற்றும் பொலிஸ் நிலைய உத்தியோஸ்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த அன்னதான நிகழ்வில் வீதியால் பயணித்த பொதுமக்கள் இந்த அன்னதானத்தைப் பெற்றுக் கொண்டனர்.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ஜெமீல் உள்ளிட்ட பொலிஸ் உத்தியோஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த அன்னதான நிகழ்விற்கு பிரபல சமூகசேவையாளர் காராள சிங்கம் சகாதேவா அனுசணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :