கட்சியின் துணைத் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்சியின் தற்போதைய செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் சமூக சேவைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.
ரமழான் மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வின் போது, உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஒன்றுகூடி நோன்பு திறந்து கொண்டதுடன், சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் கருத்துகள் பரிமாறிக் கொண்டனர்.
மேலும், நிகழ்வின் போது பொருளாதார சிரமங்களை எதிர்கொள்ளும் சில உறுப்பினர்களுக்கு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த உதவிகள் கட்சியின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மகளிர் விவகார இணைப்பாளர் சிஹாமா, கொழும்பு கிளை இணைப்பாளர் கனி, மகளிர் இணை இணைப்பாளர் சிவயோஹினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல், கட்சியின் மாவட்ட மற்றும் கிளை மட்ட உறுப்பினர்களும் பெருமளவில் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த கூட்டம் மற்றும் இப்தார் நிகழ்வு மூலம் கட்சி உறுப்பினர்களுக்கிடையேயான ஒற்றுமை மேலும் வலுப்பெறுவதுடன், எதிர்காலத்தில் சமூக சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகளும் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment