சாதனை புரிந்த மல்வத்தை மாணவி ஜினோதிகாவிற்கு விஆர் உதவி.



வி.ரி. சகாதேவராஜா-
ம்மாந்துறை கல்வி வலயத்திலிருந்து இம்முறையும் தேசிய மட்ட ஒலிம்பியாட் (கணிதம் ) போட்டியில் தெரிவாகியுள்ள மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய சாதனை மாணவி சிவரூபன் ஜினோதிகாவிற்கு ஊக்குவிப்பு உதவி வழங்கி வைக்கப்பட்டது.

லண்டன் கற்பகப்பிள்ளையார் ஆலய சபையின் இலங்கைக்கான இணைப்பாளரும் இலங்கை அகிலன் பவுண்டேசனின் உதவிப்பணிப்பாளருமான கலாநிதி விஆர். மகேந்திரனிடம் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இவ் ஊக்குவிப்பு உதவி நேற்று முன்தினம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்தியாவின் ஸ்ரீமத் பரசமய கோளறி நாதர் ஆதீன 39 ஆவது குரு மகா சன்னிதான பீடத் தலைவர் புத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் அதனை மாணவிக்கு வழங்கி வைத்தார்.
அச்சமயம் அதிபர் திருமதி கௌசல்யா ஞானேஸ்வரன்,சமூக செயற்பாட்டாளர்களான முன்னாள் தவிசாளர் கலாநிதி கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தா. பிரதீபன் ஆகியோரும் சுவாமிகளின் இந்திய பிரதிநிதிகளும் மாணவியின் பெற்றோரும் கலந்து கொண்டார்கள்.

இம்முறை தெரிவான மற்றுமொரு மாணவி மதுஸ்காவிற்கும் இவ் வுதவி இவ்வாரம் வழங்கி வைக்கப்படும் என வீஆர் மகேந்திரன், பணிப்பாளர் சகாவிடம் உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :