இலவச கண் சிகிச்சை முகாமொன்று ஞாயிற்றுக்கிழமை (5) மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரணையில் பாக்கிஸ்தான் வைத்தியர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இவ் கண் பரிசோதனை முகாமில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டனர்.
இதில், கண்ணில் வெள்ளை படர்தல் நோயினால் பாதிக்கப்பட்ட கல்குடா தொகுதியைச் சேர்ந்த 80 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமா இந்த வாரம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் மேலும் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கண் சிகிச்சை முகாமில் இனங்காணப்பட்ட சுமார் ஆயிரம் பேருக்கு காத்தான்குடியில் இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியர் குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment