தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு கல்முனை மஹ்மூத் கல்லூரி மாணவிகள் தெரிவு.



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்முறை இடம்பெற்ற கிழக்கு மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் பங்கேற்று கல்முனை வலயக் கல்விப் பணிமனை சார்பாக தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தரம் ஆறு (06) பிரிவினை சேர்ந்த எம்.ஜே. அமீஹா ஷாஹ்தா, எம்.சி.ஆர். ஜீஸா ரீம் ஆகியோர் மாகாண மட்ட போட்டியில் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

எதிர்வரும் சனிக்கிழமை, 2024.ஏப்ரல், 20 ஆம் திகதி கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெறவிருக்கின்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக கல்லூரி அதிபர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :