இம்முறை இடம்பெற்ற கிழக்கு மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவிகள் பங்கேற்று கல்முனை வலயக் கல்விப் பணிமனை சார்பாக தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தரம் ஆறு (06) பிரிவினை சேர்ந்த எம்.ஜே. அமீஹா ஷாஹ்தா, எம்.சி.ஆர். ஜீஸா ரீம் ஆகியோர் மாகாண மட்ட போட்டியில் வெற்றி பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
எதிர்வரும் சனிக்கிழமை, 2024.ஏப்ரல், 20 ஆம் திகதி கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெறவிருக்கின்ற தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக கல்லூரி அதிபர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment