கிழக்கு மாகாண பாடசாலைகளின் கல்வி சாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் முஷாரப் எம்பியின் நேரடி தலையீட்டினால் இரத்து.!



கிழக்குமாகாண பாடசாலைகளில் காணப்படும் கல்வி சாரா ஊழியர்களின் வருடாந்த இடமாற்றம் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களின் நேரடி தலையீட்டினை தொடர்ந்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளின் ஆளணி விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் தலையீடு மற்றும் முறையான பதிலீடுகள் எதுவும் இன்றியும் இடம்பெற்ற இடமாற்றம் குறித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் நேரடி கவனத்துக்கு கொண்டுவரும் வகையில் கடந்த திங்கட்கிழமை 01.04.2024 நேரடியாக கல்வி அமைச்சுக்கு விஜயம் செய்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதன் விளைவாகவே மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் மேற்படி இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :