கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள தரம்-5 மாணவர்களிற்கான ஆசி வழங்கும் நிகழ்வும் விஷேட துஆ பிரார்த்தனையும் பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் அவர்களின் வழிகாட்டலில் பகுதித்தலைவர் டீ.கே.எம்.மௌசீன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு விஷேட அதிதியாக ஹாதி அரபுக்கல்லூரியின் உதவி அதிபர் மௌலவி இர்பாத் கலந்துகொண்டு மாணவர்களுக்கான விஷேட துஆப்பிரார்த்தனையை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், இடைநிலை பகுதித்தலைவர் ,உயர்தர பகுதித்தலைவர்,அம்மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment