ஊடகவியலாளர் சாயிவிதுசாவிற்கு சர்வதேச தமிழ் பெண் ஆளுமை விருது!



வி.ரி.சகாதேவராஜா-
லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சுயாதீன ஊடகவியலாளர் திருமதி சாய் விதுஷா அஜித் தமிழ் பெண் ஆளுமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
"விழித்தெழு பெண்ணே" என்னும் மகுடத்தின் கீழ் கனடா சர்வதேச பெண்கள் அமைப்பு இந்நிகழ்வை நடத்தியது.

கண்டி கோல்டன் கிரவுண்ட் மண்டபத்தில் நேற்று முன்தினம் தமிழ் பெண் ஆளுமைகளின் விருது விழா சிறப்பாக இடம் பெற்றது . அந்த நிகழ்வில் கொழும்பில் வாழும் மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி சாயிஅஜித் பெண்ணாளுமை விருது பெற்றுக் கொண்டார்.

இவர் மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் எழுத்தாளர் செழியன் பேரின்பநாயகத்தின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :