பாதுகாப்பு அமைச்சின் தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு



பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிப் பிரிவினால் பத்தரமுல்லையில் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் நேற்று (10) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.

சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை அளித்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தாண்டு கொண்டாட்டம் பல பாரம்பரிய விளையாட்டுகளை உள்ளடக்கியிருந்ததோடு, பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களின் கலாச்சார அம்சங்களும் நிகழ்வை வண்ணமயமாக்கின.

புத்தாண்டு விழா நடைபெறும் வளாகத்திற்கு வருகை தந்த ஜனாதிபதிக்கு பாதுக்காப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, புத்தாண்டு அழகி போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதிபரிசுகளை வழங்கினார்.

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :