செம்மண்ணோடை ஹம்ரா மைதானத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை; பெருந்திரளானோர் பங்கேற்பு!



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை குபா ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று (10) காலை 6.30 மணிக்கு செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் குறித்த பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

இதில், ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து பெருநாள் வாழ்த்துக் கூறி தங்களது அன்பைப் பரிமாரிக் கொண்டனர்.

நோன்புப் பெருநாள் தொழுகையையும், குத்பா பிரசங்கத்தையும் மீராவோடை உம்மு சுலைம் பெண்கள் அரபுக் கல்லூரியின் தலைவரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மத் காஸிமி நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :