திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாவிதன்வெளி நூரானியா ஜும்மா பள்ளிவாசல் மதரஸாவுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் நிர்வாகத்திடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் நேற்று வழங்கி வைத்தார்.
நாவிதன்வெளி நூரானியா ஜும்மா பள்ளிவாசல் மதரஸாவுக்கு நிர்மாண பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இந்த நிதிக்கான ஆவணங்களை கையளித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பிரதேச அமைப்பாளருமான ஏ.சி.ஏ. நஸார் ஹாஜி, நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.பி நவாஸ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ பாவா, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment