ஏறாவூர் அப்துல் ரகுமான் கிராமத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு!



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
நாடளாவிய ரீதியில் பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுக்கும் அன்னூர் செரட்டி நிறுவனத்தின் ஏற்பாட்டில், அல்நஜத் குவைட் செரட்டி அனுசரணையில் ஏறாவூர் அப்துல் ரகுமான் கிராமத்தில் வைத்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த 360 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அன்னூர் செரட்டியின் அகில இலங்கை அமைப்பாளர் சலிம் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க அன்னூர் செரட்டி முகாமையாளர் அலிர் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேவையுடைய 360 குடும்பங்களுக்கு சுமார் 12,000ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் முன்னாள் ஏறாவூர் நகரசபை தவிசாளர் தஸ்லீம் அவர்களும் ஸம் ஸம் ரியல்ட் உரிமையாளரும் அப்துல் ரகுமான் பவுண்டேஷன் தலைவருமான அப்துல் ரகுமான் அவர்காளும் அல்ஹாஜ் எம்.எல். அப்துல் ரகுமான் ஹாஜியார் அன்னூர் செரட்டி உறுப்பினர் மற்றும் உலமாக்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.








 









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :