ஆறு கதைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் "எப்புரா"



புதுச்சேரியில் ஓர் இரவில் நடக்கும் கதையை காமெடி கலந்த ஹைபர் லிங்க் மூலமாக 'எப்புரா' என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை இரண்டாம் தயாரிப்பில் வெளியிடுகிறது…

அறிமுக இயக்குநர் A.R.ராஜேஷ் இப்படத்தினை இயக்குகிறார் பல குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் எழுதி இயக்கியிருக்கிறார் "நெடுமி" என்ற திரைப்படத்தில் இணை இயக்குனராக இருக்கிறார்.. இசையமைப்பாளர் ஜாஸ் ஜே பி, ஒளிப்பதிவு டிஜே சக்தி மற்றும் படத்தொகுப்பு அசோக் குமார் மற்றும் ராஜ் கணேஷ்

படத்தில் கதாநாயகனாக விஜய் முருகன் நடித்துள்ளார் இவர் முதல் படமான "சேயோன்" என்ற திரைப்படம் உலகளவில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்… மற்றும் இரண்டாம் கதாநாயகனாக பிரதிப்செல்வராஜ் நடித்துள்ளார், கதாநாயகியாக நத்தோஷயா, ஜூடோ, கலையரசி, அபிநயா, நடித்துள்ளனர், கார்த்திக் சிவா, காத்து கருப்பு கலை, சுப்பு, வினோத், பாண்டி செல்வம், குமரன் மற்றும் வில்லானாக ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திரு.மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்... மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்த்து தெரிவித்தார் அறிமுகக் கலைஞர்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் குவிந்து வருகிறது…

மேலும் மார்ச் மாதம் 29ஆம் ,2024 தேதி எப்புரா திரைப்படம் வெளியாகும் என ஒயிட் டவுன் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது தமிழ்நாடு தியேட்டர் உரிமையை ரஹ்மத் கிரியேஷன்ஸ் வாங்கி இருக்கிறார்கள்..




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :