அம்பாறை,சம்மாந்துறை பகுதியில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் மக்கள் பெரும் அச்சத்தில்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்டத்தில் பரவலாக பெரும் போக வேளாண்மை அறுவடை முடிந்த நிலையில் வயல் வெளிகளை நோக்கி கூட்டமாக பெரும் தொகையில் காட்டு யானைகள் வர ஆரம்பித்துள்ளன.

சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி வில்லுக்குளம் பகுதியிலுள்ள வயல் பிரதேசங்களில் புதன் கிழமை காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்பட்டது.

இந்த யானைக்கூட்டம் ஊருக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்த்தில் கூக்குரல் இட்டு அந்த யானைகளை காட்டுப் பக்கம் துரத்தி அனுப்புவதில் பிரதேச மக்கள் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :