அஸ்-ஸுஹறா பாடசாலை வித்தியாரம்ப விழா



பாறுக் ஷிஹான்-

2024ஆம் ஆண்டு தரம் 01 மாணவர்களை கல்முனை அஸ்-ஸுஹறாபாடசாலைக்கு உள்வாங்கும் வித்தியாரம்ப விழா இன்று அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி ஏனைய அதிதிகளாக ஈ.பி.எஸ்.ஐ இணைப்பாளர் ஏ.றாசிக் உதவி அதிபர்களான எஸ்.ஜுனைதீன் எம்.ஏ.எப் .மிஸ்னா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வுகள் அனைத்தும் பாடசாலை ஆசிரியர்கள்இஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள்,அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ரி.எம் அனப் ,உறுப்பினர்களான ரி.எம். இர்பான்,எம்.ஜெ.எம் ஜெசில், எம்.எம்.எம்.ஜெளபர், எம்.எம் சமீறுல்லாஹி, ஐ.ஹசீனா பானு , எல்.எம் சர்ஜுன் ,ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் மிகக் குறுகிய காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிவடைந்து.

இறுதியாக ஏடு துவங்கும் நிகழ்வுடன் அன்பளிப்புகள் பழைய மாணவர் எம்.எம்.எம்.ஸமுஹ்சீனின் அனுசரனையுடன் இடம்பெற்ற தோடு சியானுதீன்(ஹாசிமி) அவர்களின் துஆ பிரார்த்தனையுடன் இடம்பெற்றது.பிரதம அதிதி கௌரவ அதிதிகள் விஷேட அதிதிகள் அனைவரும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு களையும் பாராட்டுக்களையும் வழங்கினர்.

அத்துடன் மாணவர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :