கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று வருடங்களாக தடைப்பட்டிருந்த நாட்டின் அபிவிருத்தியை தற்போதைய ஜனாதிபதி மீண்டும் ஆரம்பித்துள்ளர்.பிரசன்ன ரணதுங்க!



முனீரா அபூபக்கர்-

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த நாட்டின் அபிவிருத்தியை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளார்...

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் அரச இயந்திரத்தின் அதிகபட்ச ஆதரவு எதிர்பார்க்கப்படுகிறது...

கிராமங்களில் அபிவிருத்தி முன்மொழிவுகளை கண்டறிவதில் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கட்டாயம்...


கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று வருடங்களாக தடைப்பட்டிருந்த நாட்டின் அபிவிருத்தியை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரச இயந்திரத்தின் அதிகபட்ச ஆதரவை எதிர்பார்ப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு ஏற்ற அபிவிருத்தித் திட்டங்களை இனங்காணுவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் பொறுப்பாகும் எனத் தெரிவித்த அமைச்சர், அந்த அபிவிருத்திச் செயற்பாடுகளை இனங்கண்டு பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மலைப் பத்தாண்டு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவிக்கும் நிகழ்வில் வெள்ளிக்கிழமை (16) கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இது மாத்தளை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அதன் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட மற்றும் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலைமையில் நடைபெற்றது.

ஜுலை 31ஆம் திகதிக்குள் நிறைவேற்றக்கூடிய வேலைத்திட்டங்களே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மலைப் பத்தாண்டு திட்டம் இந்த ஆண்டு 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அந்த மாவட்டங்கள் கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, களுத்துறை, பதுளை மற்றும் குருநாகல் ஆகும்.

மலைப் பத்தாண்டு வேலைத்திட்டம் 10 மாவட்டங்களில் உள்ள 89 பிரதேச செயலகப் பிரிவுகளில் 4,498 கிராம சேவகர் பிரிவுகளில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக கடல் மட்டத்திலிருந்து 200 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள பிரதேச செயலகங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இங்கு உரையாற்றிய அமைச்சர், மாத்தளை மாவட்டத்தில் 09 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 409 கிராம சேவகர் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டார். அந்த பிரதேச செயலக பிரிவுகள் வில்கமுவ, உக்குவெல, நாவுல, பல்லேபொல, யட்டவத்த, லக்கல, பல்லேகம, அம்பன்கங்க கோரளை, மாத்தளை மற்றும் ரத்தோட்டை என்பனவாகும்.

மாத்தளை மாவட்டத்திற்கான அபிவிருத்தி நிதி ஒதுக்கீடுகள் தொடர்பிலும் அமைச்சர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். மாத்தளை மாவட்டத்தில் மலைப் பத்தாண்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மலைப் பத்தாண்டு எனப்படும் பத்தாண்டு கால பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 10,000 மில்லியன் ரூபாவாகும். இதன் கீழ் ஒரு பிரதேச செயலகத்திற்கு தலா 100 மில்லியன் ரூபா கிடைக்கும்.

இந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில், 10 முக்கிய அபிவிருத்திப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது வாழ்வாதாரம், சந்தை அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு, கல்வி, குடிநீர் வசதி, விவசாயம் மற்றும் சிறு நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்கவை, தொலைபேசி மற்றும் இணையம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் முகாமைத்துவம் மற்றும் வீட்டு வசதிகளை மேம்படுத்துதல். மலையக பிரதேசங்களில் வாழும் பெருந்தோட்ட சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு விரைவான மற்றும் திட்டமிடப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கான மாவட்ட மற்றும் பிரதேச குழுக்களின் இணக்கப்பாடு கிடைத்த பின்னர், மாவட்ட செயலாளர்களின் முழு ஈடுபாட்டுடனும், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் பூரண ஆதரவுடனும் கூட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தை ஜனாதிபதி அலுவலகம், பணவியல், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சும் மேற்பார்வை செய்கிறது.

இந்நிகவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்தியானந்த, மாத்தளை மாவட்ட செயலாளர் தேஜானி திலகரத்ன மற்றும் அரச அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :