மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் சுதந்திர தின நிகழ்வு!



நிஸா இஸ்மாயீல்-
லங்கையின் 76 வது சுதந்திர தினத்தையொட்டி கல்முனை, மருதமுனை கலாசார மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.ஹைதர்(ஜே.பி) ஏற்பாட்டில் நிலையப்பொறுப்பதிகாரியும் தலைவருமான ஏ.ஜீ.சித்தி பாஜியா தலைமையில் இன்று (04) காலை கலாசார மத்தியநிலையத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கொடியேற்றி வைக்கப்பட்டது.

இதன் போது கலாசார மத்திய நிலையத்தின் கலாசார அபிவிருத்தி குழுவின் செயலாளரும் கவிஞருமான மூஸா விஜிலி, உப செயலாளரும் கவிதாயினியுமான ஏ.ஆர்.பாத்திமா சூபா,கலாசார மத்திய நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அகீலா பாணு,சிரேஷ்ட கவிஞர்களான ஜீனாராஜ்,ஜெசீமா முஜீப்,மாஹிறா மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக கலாசார மத்திய நிலையத்தின் வளாக சிரமதானமும் மரநடுகையும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :