காத்தான்குடியில் ஒரே மேடையில் 735 மாணவயர்களை கெளரவித்த காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம்



எம்.ஏ.ஏ.அக்தார்-
ந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கெளரவித்த புலமை விழா

காத்தான்குடியில் கடந்த ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் புலமை விழா காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 735 மாணவர்கள் பாராட்டப்பட்டு பதக்கம் அணிவிக்கப்பட்டு பரிசில்கள் நினைவுச் சின்னம் சான்றிதழ் என்பன வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதுடன் அதற்காக உழைத்த ஆசிரியர்கள் அதிபர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும் தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான அஷ்ஷெய்ஹ் ஏ.எம்.அலியார் ரியாதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆங்கில மொழித்துறை தலைவருமான கலாநிதி பெளசுல் கரீமா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்
காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி ஹாரூன் றஷாதி உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் உலமாக்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :