தெற்காசிய நகர்வல (Cross - Country)ஓட்ட தெரிவுப் போட்டியில் மலையக வீரர் வக்சனுக்கு முதலிடம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
தெற்காசிய நகர்வல ஓட்டம் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு நடைபெற்ற தெரிவுப் போட்டியில் இலங்கை இராணுவம் சார்பில் பங்குகொண்ட மலையக வீரர் விக்னராஜ் வக்சன் முதலிடம் பெற்றுள்ளார்.

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ள 3 ஆவது தெற்காசிய நகர்வல ஓட்டம் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையின் சார்பாக பங்குபற்றுகின்ற வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டார்.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள தெற்காசிய நகர்வல ஓட்டம் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சங்கமும், லங்கா லயன்ஸ் மெய்வல்லுனர் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்த தெரிவுப் போட்டி கடந்த ஞாயிறு [20] ஹோமாகம, தியகமவில் நடைபெற்றுது.

10 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட விக்னராஜ் வக்சன் முதலிடம் பிடித்தார். போட்டியை நிறைவு செய்ய 32.11 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

அண்மைக்காலமாக தேசிய ரீதியிலான நகர்வல ஓட்டம், அரை மரதன், 10 ஆயிரம் மீட்டர், 5 ஆயிரம் மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஆகிய ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை ஈட்டி வருகின்ற தலவாக்கலையைச் சேர்ந்த வக்சன், இறுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பாதுகாப்பு சேவைகள் மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 1500 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தார்.

அதுமாத்திரமின்றி, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா நகர்வல ஓட்டத்தில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :