கோடிங் மூலம் இணையத்தளங்களை உருவாக்கும் போட்டியில் தேசிய ரீதியில் ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி முதலாமிடம் பெற்ற மாணவர்களுக்கு மட்டு அரச அதிபர் கெளரவம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
கவல் தொழில்நுட்ப துறையில் இணைய தளங்களை உருவாக்கும் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டியொன்றை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அண்மையில் நடாத்தியது.

இரண்டு சுற்றுக்களாக நடாத்திய இப் போட்டியில் நாடு தளுவிய ரீதியில் 125 பாடசாலைகள் பங்கேற்றன.

இரண்டாம் சுற்றுக்கு கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக பெண்கள் கல்லூரி, குளியாப்பிட்டிய மத்திய கல்லூரி, ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி, ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரி, மிஹிந்தலே மத்திய கல்லூரி ஆகிய தெரிவு செய்யப்பட்டிருந்தன.

தரம் 6 தொடக்கம் 9 வரையிலான மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய கல்லூரி முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தினை பெற்றுக் கொண்டது.

வெற்றியீட்டிய மாணவர்களையும், பயிற்சி வழங்கிய ஆசிரியர்களையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :