அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்குமாறு அமைச்சர் பந்துல அதிகாரிகளுக்கு பணிப்பு




அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்டத்தில் அண்மையில் டீ.எஸ்.சேனநாயக சமுத்திர வான் கதவுகள் திறக்கப்பட்டதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதமடைந்த வீதிகள், பாலங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப் படுத்துமாறு வீதி, நெடுஞ்சாலைகள்,ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எம்.வீரசிங்கவின் அழைப்பின் பேரில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களை பார்வையிட்டார்.

இதன்போது வெள்ளத்தால் சேதமடைந்த வீதிகள்,பாலங்கள் தொடர்பான சேத விபரங்களை சமர்ப்பிக்குமாறும், புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :